Saturday 28 June 2014

படித்ததில் பிடித்தது.

 நிறைய பேரு ஆனந்த விகடன் படிப்பீங்க. நானும்தான். அதில் எந்தப்பகுதி பிடிக்கும்னு குறிப்பா சொல்லணும்னா கஷ்டம்தான். எல்லா பகுதிகளுமே
 ரொம்ப நல்லா இருக்கும். வலைபாயுதேன்னு ஒரு பகுதி வருது. அதில்
ட்விட்டரில் நிறைய பேரு ட்வீட்டி இருப்பாங்க. படிக்கவே சில விஷயங்கள்
 மிக சுவாரசியமாக இருக்கும். அதிலிருந்து சில ட்வீட்கள்  உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப்பகிர்வு.  விகடன் படிக்காதவங்களுக்கு இது சுவாரசியமான விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அழுத கண்ணில் இருக்கும் கண்ணீர் காய்வதர்க்குள்ளேயே சிரிப்பதற்கு
குழந்தைகளால் மட்டும்தான் முடியும்.

உங்கள் பண தைரியத்தைப் பாராட்டி ஒரு டப்பா சோளப்பொறி நூத்தம்பது ரூபா.  #  மல்டிப்ளெக்ஸ்.

கல்யாணத்துக்குப்பிற்கு பொம்பிள்ளைகளுக்குத்தாலி, ஆம்பிள்ளைகளுக்கு,
டப்பர்வேர்.

ரசத்தில முள்ளங்கி இருந்தா அது சாம்பாரா இருக்கலாம்.# அது ஹாஸ்டல் மெஸ் ரகசியங்கள்.

தட்டிக்கொடுத்து வேலை வாங்குறது டி.வி. ரிமோட் கண்ட்ரோல்கிட்ட மட்டும்தான்.

சாட் பூட் த்ரீ போட்டு முடிவெடுத்தவரை, வாழ்க்கை அழகாகவும் எளிமையாகவும் இருந்தது.

 எதை நினைச்சு ஃபேஸ்புக் ஆரம்பிச்சானோ தெரியல்லே. ஆனா அது தமிழ் நாட்ல மட்டும் ஏகப்பட்ட பேரை எழுத்தாளரா ஆக்கிவிட்டிரிச்சு.# ஹல்லோ
 மிஸ்டர் மார்க் இருக்காரா?

 நமக்குத்தான் அவை சுவரொட்டிகள்.  கழுதைக்கு அது சுவை ரொட்டிகள்.

குழந்தைகளின் அறிவை நிரூபிக்க, மா நிலங்களின்,/ நாடுகளின் தலை நகரை
ச்சொல்லச்சொல்வதைத்தவிர வேறு வழியே கண்டு பிடிக்கப்படஃவில்லையா?

உலகின் மிகப்பெரிய ஏமாற்றம், டீயில் தோய்க்கப்பட்ட பிஸ்கெட் தவறி டீக்குள்  விழுவதுதான்.

( நன்றி ஆனந்த விகடன் வலை பாயுதே)

                                                                                                                   (தொடரும்)

11 comments:

  1. சுவாரஸ்யமான தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. திருமதி, இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு, வருகை புரிந்ததற்கும் கருத்துப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி.

      Delete
  2. ஓஹோ, திருமதி போட மறந்தேனே? நினைவு படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete

  3. அருமையான டுவிட்டுகள்
    ஆனந்தவிகடனில் படிக்க விட்டுப்போனது
    மிகச் சிறந்ததை தேர்ந்தெடுத்துப்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சுவாரசியமான தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. இமா, வருகைக்கு நன்றி

      Delete
  5. ரமணி சார், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. இப்போதெல்லாம் நாங்கள் ஆனந்த விகடன் வாங்கிப்படிப்பது இல்லை. அதனால் இந்தத்தொகுப்பு புதுமையாகத் தோன்றியது. :)

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete